என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கியது- விவசாயிகள் கவலை
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உறைபனி தீவிரமாகி வருகிறது.நேற்று ஊட்டி புகர் பகுதியில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனல் 5 டிகிரி செல்சியசாகவும் குறைந்துள்ளது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
பாசன குழாய்களில் தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகி விட்டது. இதனால் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தேயிலை, மலர்ச்செடி மற்றும் காய்கறிச்செடிகளை அடர்ந்த பனி படர்ந்துள்ளதால் நோய் தாக்கி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் 16 கூட்டுறவு தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. பருவமழையால் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் பனிப்பொழிவால் தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கி வருகிறது. இதனால் கொழுந்துகள், இலைகள் சுருண்டு நிறம் மாறி வருகின்றன. இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை கட்டுப்படுத்த மானிய விலையில் அரசு மருந்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த 2 நாட்களாக புகர் பகுதியில் 5 டிகிரி செல்சியசாகவும், குன்னூர் பகுதியில் 0 டிகிரி செல்சியசாகவும் வெப்ப நிலை பதிவானது. இன்று அதிக பட்ச வெப்ப நிலை 12 டிகிரி செல்சியசாகவும், குறைந்த பட்ச வெப்ப நிலை 2 டிகிரி செல்சியசாகவும் பதிவானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்