search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    சொந்த ஊரில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் முதலமைச்சர் பழனிசாமி

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரான எடப்பாடி சிலுவம்பாளையத்துக்கு சென்று தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்.
    சேலம்:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பிற்பகல் சேலம் வருகிறார்.

    அவருக்கு மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ., மாநில கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    மேலும் அவர் ஓமலூர் கட்சி அலுவலகத்திற்கு சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    பின்னர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துக்களை பெறுகின்றனர். இதைத் தொடர்ந்து அவர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று தங்குகிறார்.

    நாளை (15-ந்தேதி) புதன்கிழமை சீலநாய்க்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையை திறந்து வைக்கிறார். இதையடுத்து சொந்த ஊரான எடப்பாடி சிலுவம்பாளையத்துக்கு சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்.

    நாளை மறுநாள் (16-ந் தேதி) முக்கிய கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். அன்று மாலை கோவை சென்று விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார்.
    Next Story
    ×