என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சாரதா தேர்வு
Byமாலை மலர்11 Jan 2020 7:36 AM GMT (Updated: 11 Jan 2020 7:36 AM GMT)
நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த சாரதா மட்டும் போட்டியிட்டதால் போட்டியின்றி அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தேர்தல் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மலர்விழி தமைமையில் நடைபெற்றது. தேர்தலில் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த சாரதா மட்டும் போட்டியிட்டதால் போட்டியின்றி அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை மாவட்ட கலெக்டர் மெகராஜ் முறையாக அறிவித்தார். தேர்தலில் 17 உறுப்பினர்களில் 12 பேர் மட்டுமே பங்கேற்றனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த பள்ளிபாளையம் 1-வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் பங்கேற்கவில்லை.
ஊராட்சி குழு உறுப்பினராக வெற்றி பெற்ற தி.மு.க.வை சேர்ந்த மல்லசமுத்திரம் அருள்செல்வி, ராசிபுரம் ராஜேந்திரன், சேந்தமங்கலத்தை சேர்ந்த ராஜாத்தி, எருமப்பட்டியைச் சேர்ந்த தவமணி ஆகியோர் தலைவர் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:-
எலச்சிபாளையம் ஜெயசுதா (அ.தி.மு.க) , எருமப்பட்டி வரதராஜன் (அ.தி.மு.க) , கபிலர்மலை ஜே.பி.ரவி (அதிமுக) , நாமக்கல் சுமதி (அ.தி.மு.க) , பள்ளிபாளையம் தனலட்சுமி (அ.தி.மு.க) , சேந்தமங்கலம் மணிமாலா(தி.மு.க.), வெண்ணந்தூர் தங்கம்மாள் (அ.தி.மு.க).
நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தேர்தல் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மலர்விழி தமைமையில் நடைபெற்றது. தேர்தலில் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த சாரதா மட்டும் போட்டியிட்டதால் போட்டியின்றி அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை மாவட்ட கலெக்டர் மெகராஜ் முறையாக அறிவித்தார். தேர்தலில் 17 உறுப்பினர்களில் 12 பேர் மட்டுமே பங்கேற்றனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த பள்ளிபாளையம் 1-வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் பங்கேற்கவில்லை.
ஊராட்சி குழு உறுப்பினராக வெற்றி பெற்ற தி.மு.க.வை சேர்ந்த மல்லசமுத்திரம் அருள்செல்வி, ராசிபுரம் ராஜேந்திரன், சேந்தமங்கலத்தை சேர்ந்த ராஜாத்தி, எருமப்பட்டியைச் சேர்ந்த தவமணி ஆகியோர் தலைவர் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:-
எலச்சிபாளையம் ஜெயசுதா (அ.தி.மு.க) , எருமப்பட்டி வரதராஜன் (அ.தி.மு.க) , கபிலர்மலை ஜே.பி.ரவி (அதிமுக) , நாமக்கல் சுமதி (அ.தி.மு.க) , பள்ளிபாளையம் தனலட்சுமி (அ.தி.மு.க) , சேந்தமங்கலம் மணிமாலா(தி.மு.க.), வெண்ணந்தூர் தங்கம்மாள் (அ.தி.மு.க).
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X