search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பள்ளி மாணவர்கள்
    X
    அரசு பள்ளி மாணவர்கள்

    சென்னையில் நாளை அரசு, தனியார் பள்ளிகள் இயங்கும்

    சென்னையில் நாளை அரசு, தனியார் பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

    இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக். பள்ளிகள் நாளை இயங்கும் என என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார்.

    உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 2ம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் 4ம் தேதி திறக்கப்பட்டன என்றும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நாளை பள்ளிகள் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    பொங்கல்

    பொங்கல் விடுமுறையும் வர உள்ளதால் சனிக்கிழமையான நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×