search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மனைவியுடன் பேசியதை படம் பிடித்த வாலிபர் மீது தாக்குதல் - சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

    போரூர் அருகே மனைவியுடன் பேசியதை படம் பிடித்த வாலிபர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
    போரூர்:

    சென்னை கே.கே. நகர் பாரதிதாசன் காலனியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன்.இவரது மனைவி நர்மதா. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

    கடந்த வாரம் நர்மதா, ராமாபுரம் கலசாத்தம்மன் கோவில் அருகே திருநின்றவூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வரும் ராஜேஷ்குமார் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஜனார்த்தனன் தனது செல்போனில் இருவரையும் படம் பிடித்தார். இதைக்கண்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் தகராறில் ஈடுபட்டு ஜனார்த்தனனை சரமாரியாக தாக்கினார்.

    இதுகுறித்து ராயலா நகர் போலீஸ் நிலையத்தில் ஜனார்த்தனன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர்.

    இன்ஸ்பெக்டர் தாமஸன் ஜார்ஜ் விசாரணை நடத்தி, பொது இடத்தில் தகராறில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், ஜனார்த்தனன் இருவர் மீதும் 75-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளார்.

    Next Story
    ×