search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏரியில் மண் சரிந்து தொழிலாளி பலியான இடம்.
    X
    ஏரியில் மண் சரிந்து தொழிலாளி பலியான இடம்.

    ஜோலார்பேட்டை அருகே ஏரியில் மண் சரிந்து தொழிலாளி பலி

    ஜோலார்பேட்டை அருகே ஏரியில் மண் சரிந்து தொழிலாளி பலியானார். மேலும் படுகாயம் அடைந்த 2 பேர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த சின்னா கவுண்டனூரை சேர்ந்தவர் வேலு. இவர் ஊசி நாட்டான் கிராமத்தில் உள்ள ஏரியில் வண்டல் மண் அள்ள தண்டபாணி (27), கீர்த்தி (24), ராஜன் (28) ஆகியோரை இன்று அதிகாலை அழைத்து சென்றார். அவர்கள் ஏரியில் மண் அள்ளியபோது திடீரென மண் சரிந்து தொழிலாளர்கள் 3 பேரையும் மூடியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வேலு, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 3 பேரை மீட்டார். இதில் மூச்சுத்திணறி தண்டபாணி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரையும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து ஜோலார் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மண்ணில் புதைந்து பலியான தண்டபாணிக்கு இந்துமதி என்ற மனைவியும், சுமித்ராஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர்.
    Next Story
    ×