என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக சட்டசபையில் இன்று 3 சட்ட திருத்த மசோதாக்கள் தாக்கல்
Byமாலை மலர்8 Jan 2020 4:01 AM GMT (Updated: 8 Jan 2020 4:01 AM GMT)
மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, கூட்டுறவு சங்க திருத்த மசோதா உள்பட 3 மசோதாக்கள் தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் கூடுவது வழக்கம். கவர்னர் உரையுடன் தொடங்கும் கூட்டம் 4 நாட்கள் அல்லது 5 நாட்கள் நடைபெறும். அவ்வகையில் இவ்வாண்டிற்கான கூட்டம் கடந்த திங்கள் (ஜனவரி 6ம் தேதி) தொடங்கியது.
இந்நிலையில், கூட்டுறவு சங்க திருத்த மசோதா உள்பட 3 மசோதாக்கள் இன்றைய சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தரின் வயது வரம்பை உயர்த்துவது உள்ளிட்ட சில அம்சங்களுடன் மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்ய உள்ளார்.
கூட்டுறவு சங்க தலைவர், உறுப்பினர்கள் தவறு செய்தால் மாவட்ட இணைபதிவாளரே அவர்களை சஸ்பெண்ட் செய்யலாம் போன்ற சில அம்சங்களுடன் கூட்டுறவு சங்க திருத்த மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜு தாக்கல் செய்ய உள்ளார்.
அதே போல், வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதல் சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் துரைக்கண்ணு தாக்கல் செய்ய உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X