search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் இடையே உள்ள மெட்ரோ ரெயில் பாதை.
    X
    வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் இடையே உள்ள மெட்ரோ ரெயில் பாதை.

    அடுத்த மாதம் வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்

    வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் இறுதியில் நடக்கிறது.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை- விமான நிலையத்துக்கு 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்ட மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

    வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு வழித்தட பாதை நீட்டிப்பு ரூ.3,700 கோடி மதிப்பீட்டில் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழித்தடத்தில் தியாகராயா கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, டோல்கேட், தாங்கல், கவுரி ஆஷ்ரம், திருவொற்றியூர், விம்கோ நகர் உள்பட 8 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த வழித்தடத்தில் தண்டவாளம் சிக்னல்கள் அமைக்கும்பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் இறுதியில் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து ஜூன் மாதம் முதல் வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் வழித்தடத்தில் பயணிகள் சேவை நடைபெற உள்ளது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் வழித்தட பாதை நீட்டிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    தற்போது இந்த வழித்தடத்தில் தண்டவாளங்கள், சிக்னல்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது.

    அடுத்த மாதம் இறுதியில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஜூன் மாதத்தில் வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோநகர் வழித்தடத்தில் பயணிகள் சேவை தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×