என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் பள்ளி மாணவியை கற்பழித்து கொன்ற காதலன் கைது
Byமாலை மலர்4 Jan 2020 4:16 AM GMT (Updated: 4 Jan 2020 4:16 AM GMT)
திருச்சியில் 16 வயது பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் மணிகண்டம் வடக்கு நாகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகள் கவிபிரியா (வயது 16). 11-ம்வகுப்பு மாணவியான இவர் கடந்த 31-ந்தேதி வீட்டை விட்டு சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் அங்குள்ள காட்டுப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கவிபிரியா பிணமாக கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கை, கால் கட்டப்பட்டிருந்ததால் மர்மநபர்கள் கவிபிரியாவை காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
எனவே அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கவிபிரியாவுக்கும், இனாம்மாத்தூர் பகுதியை சேர்ந்த மதிக்குமார்(22) என்பவருக்கும் காதல் இருந்து வந்தது தெரிய வந்தது. இதனால் காதல் பிரச்சனையில் கவிபிரியாவை மதிக்குமார் கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கவிபிரியாவை மதிக்குமார் கொலை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது.
மதிக்குமார் கவி பிரியாவை காதலித்து வந்த நிலையில் அவர் வேறு ஒரு வாலிபருடன் பழகி வந்தது மதிக்குமாருக்கு பிடிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் சம்பவத்தன்று கவி பிரியாவை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றதும் வாலிபருடன் பழகுவதை நிறுத்துமாறு கூறவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த மதிக்குமார் கவிபிரியாவை கற்பழித்ததுடன், கல்லை எடுத்து தலையில் போட்டுள்ளார். இதில் கவிபிரியா தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து கவிபிரியா அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால் மாணவியின் முகத்தை சுற்றி கட்டி விட்டு மதிக்குமார் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்து விட்டனர்.
இதனிடையே இந்த கொலையில் மதிக்குமாரின் நண்பர்கள் 3பேருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவியை காதலன் கற்பழித்து கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் வடக்கு நாகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகள் கவிபிரியா (வயது 16). 11-ம்வகுப்பு மாணவியான இவர் கடந்த 31-ந்தேதி வீட்டை விட்டு சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் அங்குள்ள காட்டுப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கவிபிரியா பிணமாக கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கை, கால் கட்டப்பட்டிருந்ததால் மர்மநபர்கள் கவிபிரியாவை காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
எனவே அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கவிபிரியாவுக்கும், இனாம்மாத்தூர் பகுதியை சேர்ந்த மதிக்குமார்(22) என்பவருக்கும் காதல் இருந்து வந்தது தெரிய வந்தது. இதனால் காதல் பிரச்சனையில் கவிபிரியாவை மதிக்குமார் கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கவிபிரியாவை மதிக்குமார் கொலை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது.
மதிக்குமார் கவி பிரியாவை காதலித்து வந்த நிலையில் அவர் வேறு ஒரு வாலிபருடன் பழகி வந்தது மதிக்குமாருக்கு பிடிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் சம்பவத்தன்று கவி பிரியாவை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றதும் வாலிபருடன் பழகுவதை நிறுத்துமாறு கூறவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த மதிக்குமார் கவிபிரியாவை கற்பழித்ததுடன், கல்லை எடுத்து தலையில் போட்டுள்ளார். இதில் கவிபிரியா தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து கவிபிரியா அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால் மாணவியின் முகத்தை சுற்றி கட்டி விட்டு மதிக்குமார் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்து விட்டனர்.
இதனிடையே இந்த கொலையில் மதிக்குமாரின் நண்பர்கள் 3பேருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவியை காதலன் கற்பழித்து கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X