search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வக்கீல் சுரேஷ்
    X
    வக்கீல் சுரேஷ்

    மணப்பெண் பேச மறுப்பு - திருமணம் நிச்சயமான வக்கீல் எடுத்த முடிவால் அதிர்ச்சி

    கனகசெட்டிகுளத்தில் திருமணம் நிச்சயமான பெண் பேச மறுத்ததால் வக்கீல் எடுத்த முடிவு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சேதராப்பட்டு:

    புதுவை கனகசெட்டி குளத்தை சேர்ந்தவர் கோதண்டம். விவசாயி.

    இவரது மகன் சுரேஷ் (வயது 31). வக்கீலுக்கு படிப்பு முடிந்து கோர்ட்டில் பணியாற்றி வந்தார்.

    இவர் சட்டகல்லூரியில் படித்தபோது அவருடன் கடலூரை சேர்ந்த பெண் ஒருவரும் படித்தார். அவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

    அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வருகிற 27-ந்தேதி திருமணம் நடப்பதாக இருந்தது.

    திருமண அழைப்பிதழ் தேர்வு செய்வதற்காக நேற்று அந்த பெண் புதுவை வந்தார். சுரேசும் அந்த பெண்ணும் அழைப்பிதழ் விற்பனை கடைக்கு சென்று அழைப்பிதழை தேர்வு செய்தனர்.

    அதன்பிறகு பல்வேறு இடங்களுக்கும் அவர்கள் சென்று வந்தனர். இரவு அந்த பெண் கடலூர் சென்றுவிட்டார்.

    இதற்கிடையே சுரேஷ் அந்த பெண்ணுடன் தொடர்பு கொள்வதற்காக போனில் பேச முயன்றார். ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனால் இரவு 11 மணியளவில் அந்த பெண்ணுக்கு வீடியோ காலில் சுரேஷ் பேசினார்.

    அப்போது நீ என்னுடன் பேச மறுப்பதால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று நாற்காலியில் நின்றபடி மின்விசிறியில் தூக்கு மாட்டினார். அதன்பிறகு போன் துண்டிக்கப்பட்டு விட்டது.

    ஏதோ விளையாட்டுக்காகத்தான் இப்படி செய்கிறார் என நினைத்தார். ஆனாலும் பதட்டம் அடைந்த அவர் அந்த பகுதியை சேர்ந்த தனது நண்பர் சிவசக்தியுடன் தொடர்பு கொண்டு வி‌ஷயத்தை கூறினார்.

    உடனே சிவசக்தி சுரேஷ் வீட்டுக்கு சென்றார். அங்கு சுரேசின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டி பார்த்தனர். உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

    அப்போது அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே தூக்கில் இருந்து அவரை மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.

    இதற்கிடையே அந்த பெண்ணும் கடலூரில் இருந்து புதுவை வந்து சேர்ந்தார். காலாப்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.

    அந்த பெண் பேச மறுத்ததால் தான் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×