என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் 130 கிலோ குட்கா பறிமுதல்
Byமாலை மலர்31 Dec 2019 7:45 AM GMT (Updated: 31 Dec 2019 7:45 AM GMT)
கோவையில் 130 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் குட்கா பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
கோவை:
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் இன்று புலியகுளம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் செயல்பட்டு வரும் 2 கடைகளில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் குட்கா பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
கடை உரிமையாளர்கள் ஆறுமுகம் (45), சுயம்பு துரை( 37) ஆகியோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம். தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகளை நடத்துவோம். கோவை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் குடோன் என்று யாரேனும் வாடகைக்கு கேட்டால் முழுமையாக விசாரித்து வீட்டை வாடகைக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறாக வீட்டை தவறாக பயன்படுத்தினால் வீட்டுக்கு சீல் வைக்கப்படும். மேலும் வழக்கு முடியும் வரை அந்த வீட்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
எனவே வீட்டு உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை அதிகாரிகள் பார்வையிட்ட காட்சி.
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் இன்று புலியகுளம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் செயல்பட்டு வரும் 2 கடைகளில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் குட்கா பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
கடை உரிமையாளர்கள் ஆறுமுகம் (45), சுயம்பு துரை( 37) ஆகியோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம். தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகளை நடத்துவோம். கோவை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் குடோன் என்று யாரேனும் வாடகைக்கு கேட்டால் முழுமையாக விசாரித்து வீட்டை வாடகைக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறாக வீட்டை தவறாக பயன்படுத்தினால் வீட்டுக்கு சீல் வைக்கப்படும். மேலும் வழக்கு முடியும் வரை அந்த வீட்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
எனவே வீட்டு உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை அதிகாரிகள் பார்வையிட்ட காட்சி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X