search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கோவையில் மொபட் பள்ளத்தில் பாய்ந்து பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

    கோவை போத்தனூரில் மொபட் பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கோவை:

    கோவை போத்தனூர் ரோடு சாய்நகரை சேர்ந்தவர் சுல்தான் பாட்ஷா. இவரது மகன் ஆசிக் பாட்ஷா (வயது 17). இவரது நண்பர்கள் ஆத்துபாலத்தை சேர்ந்த முகமது சபீர் மகன் முகமது நசீர் (16), மஸ்தான் சாகிப் வீதியை சேர்ந்த முகமது அசாம் மகன் முகமது அஸ்கர் (15). இவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறனர். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மாணவர்கள் 3 பேரும் ஒரு மொபட்டில் ஆத்துபாலத்தில் இருந்து போத்தனூர் நோக்கி சென்றனர். மொபட்டை ஆசிக் பாட்ஷா ஓட்டி சென்றார். மற்ற 2 பேரும் பின்னால் அமர்ந்து இருந்தனர். மொபட் போத்தனூர் ரோடு சாய் நகர் சந்திப்பு அருகே சென்ற போது ரோட்டின் நடுவில் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. பாய்ந்த வேகத்தில் மொபட்டின் பின் பக்க டயர் வெடித்தது. இதில் மொபட்டில் சென்ற 3 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    பலத்த காயம் அடைந்த முகமது நசீர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய ஆசிக் பாட்ஷா, முகமது அஸ்கர் ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வரும் வழியிலேயே ஆசிக் பாட்ஷா பரிதாபமாக இறந்தார். முகமது அஸ்கர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×