search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆலங்குளம் அருகே ரவுடி கொலையில் 5 பேர் கைது

    ஆலங்குளம் அருகே ரவுடி கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரை சேர்ந்த சுப்பையா மகன் குமார் என்ற கெவுளி குமார் (வயது 35), கூலி தொழிலாளி. இவருக்கு கனகா (30) என்ற மனைவியும், சுப்ரியா (12) என்ற மகளும், விக்னேஸ்வரன் (10) என்ற மகனும் உள்ளனர்.

    ஆலங்குளம் அருகே மேலகுத்தப்பாஞ்சான் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டில் குமார் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக அவர் அங்கிருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆலங்குளம் அருகே ராம்நகருக்கு வந்து குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் குமார் நேற்று மாலை ராம்நகரில் அம்பை மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் சுக்கு காப்பி குடிக்க வந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேர் கும்பல், குமாரை வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் தாங்கள் வைத்திருந்த அரிவாளால், குமாரை சரமாரியாக வெட்டியது.

    இதில் உடலில் பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அந்த கும்பல் அவசரம் அவசரமாக ஒரு மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு, மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றது.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் பாப்பாக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். குமார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையான குமார் மீது போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், அவர் பிரபல ரவுடி என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அவர் குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவர் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    இதில் திடுக் தகவல் கிடைத்தது. கடந்த 2014-ஆம் ஆண்டு நெட்டூரை சேர்ந்த மாரியப்பன் என்பவரை குமார் வெட்டிக்கொலை செய்துள்ளார். இதற்கு பழிக்குப்பழியாக நெட்டூரை சேர்ந்த மற்றொரு மாரியப்பன்(19), அவரது உறவினார்கள் விஜய் என்ற முத்துப்பாண்டி(23), ராஜா(25), முருகன்(32), துரைக்குட்டி(23) ஆகிய 5 பேர் சேர்ந்து குமாரை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்களை தீவிரமாக தேடி 5 பேரையும் கைது செய்தனர். அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×