search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    மத்திய அரசின் உதவியில்லாமல் 5 துறைகளில் புதுச்சேரி முதலிடம்- நாராயணசாமி

    மத்திய அரசின் நிதியுதவி உள்ளிட்ட எந்தவித உதவியும் இல்லாமல் புதுச்சேரி 5 துறைகளில் முதலிடம் பிடித்துள்ளது என மாநில முதல்வர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டி வருமாறு:-

    சிறந்த நிர்வாகம், மனித வளம், மருத்துவம் உள்ளிட்ட 5 துறைகளில் புதுச்சேரி முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அரசின் நிதி உள்ளிட்ட எந்தவித உதவியும் இல்லாமல் புதுச்சேரி 5 துறைகளில் முதலிடம் பிடித்துள்ளது. அரசுக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்தை பாராட்ட மனமில்லாதவராக கவர்னர் கிரண்பேடி உள்ளார்.

    இவ்வாறு அவர்  கூறினார்.

    கவர்னர் கிரண்பேடி

    மேலும், கேசினோ போன்ற சூதாட்ட கிளப்புகளை திறப்பதுதான் சாதனையா? என கவர்னர் கிரண்பேடி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாராயணசாமி, சுற்றுலா பயணிகளுக்கு எது தேவையோ அதை புதுச்சேரி அரசு வழங்கும் என்று கூறினார்.

    பாஜக ஆளும் மாநிலங்களில் கேசினோ இருப்பது குறித்து கிரண்பேடி கேள்வி எழுப்பாதது ஏன்? என்றும் நாராயணசாமி சுட்டிக்காட்டினார்.

    Next Story
    ×