என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வானூர் அருகே அரசு ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்23 Dec 2019 6:24 AM GMT (Updated: 23 Dec 2019 6:24 AM GMT)
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட நாவல் குளம் கலைவாணர் நகரை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 65).
புதுவையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது உறவினர்கள் நெய்வேலியில் உள்ளனர். இவர்களை பார்ப்பதற்காக விவேகானந்தன் தனது மனைவியுடன் நெய்வேலிக்கு சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்றனர்.
நேற்று மாலை விவேகானந்தன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
பதறிபோன அவர் இது குறித்து ஆரோவில் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட நாவல் குளம் கலைவாணர் நகரை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 65).
புதுவையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது உறவினர்கள் நெய்வேலியில் உள்ளனர். இவர்களை பார்ப்பதற்காக விவேகானந்தன் தனது மனைவியுடன் நெய்வேலிக்கு சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்றனர்.
நேற்று மாலை விவேகானந்தன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
பதறிபோன அவர் இது குறித்து ஆரோவில் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X