என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சியில் விநோதம் - மருமகள் கடித்ததில் மாமியாரின் தலையில் 6 தையல்
Byமாலை மலர்16 Dec 2019 10:13 AM GMT (Updated: 16 Dec 2019 10:13 AM GMT)
பொள்ளாச்சியில் மருமகள் கடித்ததில் மாமியாரின் தலையில் 6 தையல் போடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அடுத்த மின் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி (வயது 62). பத்திர எழுத்தர். இவரது மகன் சரவணகுமார் (38). இவரது மனைவி கல்பனா (33). கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டால் சரவணக்குமார் தனது தாய் நாகேஸ்வரி வீட்டில் தங்கி விடுவார். இதனால் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் கல்பனா தன்னை தாக்கி விட்டதாக மாமியார் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தன் மீதான புகாரை வாபஸ் பெற கூறி கல்பானா மாமியாரை மிரட்டி வந்தார். இந்நிலையில் நாகேஸ்வரி மின்நகர் பகுதியில் நின்றார். அப்போது அங்கு வந்த கல்பனா மாமியாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த கல்பனா மாமியாரின் தலையில் பலமாக கடித்தார்.
இதில் படுகாயம் அடைந்த நாகேஸ்வரி அலறி சத்தம்போட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது தலையில் 6 தையல் போடப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகள் கல்பனாவை கைது செய்தனர். மருமகள் கடித்ததில் மாமியாரின் தலையில் 6 தையல் போட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடம் விநோதமாக பேசப்படுகிறது.
பொள்ளாச்சி அடுத்த மின் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி (வயது 62). பத்திர எழுத்தர். இவரது மகன் சரவணகுமார் (38). இவரது மனைவி கல்பனா (33). கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டால் சரவணக்குமார் தனது தாய் நாகேஸ்வரி வீட்டில் தங்கி விடுவார். இதனால் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் கல்பனா தன்னை தாக்கி விட்டதாக மாமியார் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தன் மீதான புகாரை வாபஸ் பெற கூறி கல்பானா மாமியாரை மிரட்டி வந்தார். இந்நிலையில் நாகேஸ்வரி மின்நகர் பகுதியில் நின்றார். அப்போது அங்கு வந்த கல்பனா மாமியாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த கல்பனா மாமியாரின் தலையில் பலமாக கடித்தார்.
இதில் படுகாயம் அடைந்த நாகேஸ்வரி அலறி சத்தம்போட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது தலையில் 6 தையல் போடப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகள் கல்பனாவை கைது செய்தனர். மருமகள் கடித்ததில் மாமியாரின் தலையில் 6 தையல் போட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடம் விநோதமாக பேசப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X