என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காற்றழுத்த தாழ்வு நிலை, புயல் இல்லாமலே தமிழகத்தில் இயல்பான அளவு மழை
Byமாலை மலர்16 Dec 2019 2:52 AM GMT (Updated: 16 Dec 2019 2:52 AM GMT)
காற்றழுத்த தாழ்வுநிலை, புயல் இல்லாமலேயே தமிழகம் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெறும் இயல்பான மழை அளவை தொட்டுவிட்டது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி, டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறும். பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் பெறும் இயல்பான மழை அளவு 44 செ.மீ. ஆகும். தமிழகம் பெறும் ஆண்டு மழைப்பொழிவில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிகம் மழை பெறும்.
இந்த மழையை தான் தமிழக விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 20-ந்தேதிக்கு முன்போ அல்லது பின்னரோ வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதம் 16-ந்தேதி தொடங்கியது.
பருவமழையின் முதல் பாதியில் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது. அதன்பின்னர், நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து பெரிய அளவில் மழை இல்லை. இதனால் இயல்பான மழை அளவை தமிழகம் பெறுமா? என்ற சந்தேகமும் நிலவியது.
அப்படி இருந்த சூழ்நிலையில், நவம்பர் மாதத்தில் 28, 29, 30-ந்தேதிகளிலும், கடந்த 1, 2, 3-ந்தேதிகளிலும் தமிழகத்தில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதில் கடந்த 1-ந்தேதி ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் சராசரியாக 4 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.
அதன்பின்னர், மழை சற்று குறைந்தது. நேற்று முன்தினமும்(14-ந்தேதி), அதற்கு முந்தையநாளும்(13-ந்தேதி) தமிழகத்தில் ஓரளவு மழை பெய்தது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் நந்தியார் நீர்நிலை பகுதியில் 9 செ.மீ. மழை பதிவாகியது.
வங்கக்கடலில் உருவாகும் மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயல் போன்ற வானிலை நிகழ்வுகளினால் தமிழகத்துக்கு வட கிழக்கு பருவமழை காலத்தில் மழை கிடைத்து வருகிறது.
அப்படி எந்த நிகழ்வுகளும் இல்லாமலேயே தமிழகம் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெறும் மழை அளவை தொட்டு இருக்கிறது. அதாவது, வடகிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில் இயல்பை தொட்டுவிட்டது.
தமிழகம் இந்த காலகட்டத்தில்(அக்டோபர் 1-ந்தேதி முதல் நேற்று வரை) 41.3 செ.மீ. மழையை பெற்று இருக்க வேண்டும். ஆனால் இப்போது 44.2 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இது இயல்பை விட அதிகம் ஆகும்.
மாவட்டங்கள் வாரியாக பார்க்கும் போது 12 மாவட்டங்கள் இயல்பை விட அதிகம் மழையை பெற்று இருக்கிறது. அதில் நீலகிரி அதிகபட்சமாக மழை பெற்றுள்ளது. இயல்பைவிட 74 சதவீதம் மழை அதிகம் பதிவாகி இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளன.
அதேபோல், குறைந்தபட்ச மழைப்பதிவை பெற்ற மாவட்டங்களில் வேலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் ஆகும். அந்த மாவட்டங்கள் இயல்பை விட 29 சதவீதம் குறைவான மழையை பெற்றுள்ளன. சென்னையை பொறுத்தவரையில் 13 சதவீதம் இயல்பை விட குறைவாக மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி, டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறும். பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் பெறும் இயல்பான மழை அளவு 44 செ.மீ. ஆகும். தமிழகம் பெறும் ஆண்டு மழைப்பொழிவில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிகம் மழை பெறும்.
இந்த மழையை தான் தமிழக விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 20-ந்தேதிக்கு முன்போ அல்லது பின்னரோ வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதம் 16-ந்தேதி தொடங்கியது.
பருவமழையின் முதல் பாதியில் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது. அதன்பின்னர், நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து பெரிய அளவில் மழை இல்லை. இதனால் இயல்பான மழை அளவை தமிழகம் பெறுமா? என்ற சந்தேகமும் நிலவியது.
அப்படி இருந்த சூழ்நிலையில், நவம்பர் மாதத்தில் 28, 29, 30-ந்தேதிகளிலும், கடந்த 1, 2, 3-ந்தேதிகளிலும் தமிழகத்தில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதில் கடந்த 1-ந்தேதி ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் சராசரியாக 4 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.
அதன்பின்னர், மழை சற்று குறைந்தது. நேற்று முன்தினமும்(14-ந்தேதி), அதற்கு முந்தையநாளும்(13-ந்தேதி) தமிழகத்தில் ஓரளவு மழை பெய்தது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் நந்தியார் நீர்நிலை பகுதியில் 9 செ.மீ. மழை பதிவாகியது.
வங்கக்கடலில் உருவாகும் மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயல் போன்ற வானிலை நிகழ்வுகளினால் தமிழகத்துக்கு வட கிழக்கு பருவமழை காலத்தில் மழை கிடைத்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு இதுவரை அதிகபட்சமாக மேலடுக்கு சுழற்சியால் மட்டுமே மழை கிடைத்து இருக்கிறது. அதுதவிர காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலம் மற்றும் புயல் போன்ற எந்த வானிலை நிகழ்வுகளும் இதுவரை ஏற்படவில்லை.
அப்படி எந்த நிகழ்வுகளும் இல்லாமலேயே தமிழகம் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெறும் மழை அளவை தொட்டு இருக்கிறது. அதாவது, வடகிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில் இயல்பை தொட்டுவிட்டது.
தமிழகம் இந்த காலகட்டத்தில்(அக்டோபர் 1-ந்தேதி முதல் நேற்று வரை) 41.3 செ.மீ. மழையை பெற்று இருக்க வேண்டும். ஆனால் இப்போது 44.2 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இது இயல்பை விட அதிகம் ஆகும்.
மாவட்டங்கள் வாரியாக பார்க்கும் போது 12 மாவட்டங்கள் இயல்பை விட அதிகம் மழையை பெற்று இருக்கிறது. அதில் நீலகிரி அதிகபட்சமாக மழை பெற்றுள்ளது. இயல்பைவிட 74 சதவீதம் மழை அதிகம் பதிவாகி இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளன.
அதேபோல், குறைந்தபட்ச மழைப்பதிவை பெற்ற மாவட்டங்களில் வேலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் ஆகும். அந்த மாவட்டங்கள் இயல்பை விட 29 சதவீதம் குறைவான மழையை பெற்றுள்ளன. சென்னையை பொறுத்தவரையில் 13 சதவீதம் இயல்பை விட குறைவாக மழை பதிவாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X