என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொடைரோடு ரெயில் நிலையத்தில் பேராசிரியையிடம் சில்மிஷம் செய்த மெக்கானிக் கைது
கொடைரோடு:
தென்காசி மாவட்டம் குற்றாலம் இந்திராநகரை சேர்ந்தவர் டாக்டர் சித்ரா (வயது57). இவர் இணைபேராசிரயராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று திருப்பதியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரெயிலில் மதுரை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
கொடைரோடு ரெயில் நிலையத்தில் இரவு 2.30 மணி அளவில் ஏ.சி. கோச் அறையில் இவர் இருந்தபோது உள்ளே நுழைந்த ஒரு வாலிபர் அவரிடம் தவறாக நடக்க முயன்றார். அவர் சத்தம்போடவே அங்கிருந்து அவர் ஓடிவிட்டார். இதனையடுத்து சித்ரா மதுரை ரெயில் நிலையத்தில் இறங்கி புகார் அளித்தார்.
ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில் ரெயில்வேயில் ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரியும் வடமதுரை அருகில் உள்ள முள்ளம் பட்டியை சேர்ந்த சரவணக்குமார் (34) என்பவர்தான் சில்மிஷம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கொடைரோடு ரெயில்வே போலீசார் சரவணக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்