என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் வங்கி அதிகாரி வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்11 Dec 2019 6:52 AM GMT (Updated: 11 Dec 2019 6:52 AM GMT)
மதுரையில் வங்கி அதிகாரி வீட்டில் 80 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை அழகிரி நகரை சேர்ந்தவர் தனசேகரன் (வயது58). இவர் மதுரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 1-ந்தேதி குடும்பத்தினருடன் தனசேகரன் சென்னைக்கு சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 80 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர்.
சென்னையில் இருந்து மதுரை திரும்பிய தனசேகரன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு மோப்பநாயுடன் வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகை தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட நகை-பணம் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.
கொள்ளையர்கள் குறித்து துப்பு துலக்க அந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
வங்கி அதிகாரி தனசேகரன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
மதுரை அழகிரி நகரை சேர்ந்தவர் தனசேகரன் (வயது58). இவர் மதுரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 1-ந்தேதி குடும்பத்தினருடன் தனசேகரன் சென்னைக்கு சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 80 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர்.
சென்னையில் இருந்து மதுரை திரும்பிய தனசேகரன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு மோப்பநாயுடன் வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகை தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட நகை-பணம் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.
கொள்ளையர்கள் குறித்து துப்பு துலக்க அந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
வங்கி அதிகாரி தனசேகரன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X