என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விபத்தில் கையை இழந்த பெண்ணுக்கு ரூ.23 லட்சம் இழப்பீடு - மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவு
Byமாலை மலர்11 Dec 2019 5:59 AM GMT (Updated: 11 Dec 2019 5:59 AM GMT)
கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் கையை இழந்த பெண்ணுக்கு ரூ.23 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ஜோதி.
கடந்த 2017 -ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜோதி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் ஒடாமா நகரில் உள்ள பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் வேகமாக ஓடி அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோதி பலத்த காயம் அடைந்தார்.
அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கையில் ஏற்பட்டிருந்த பலத்த காயங்கள் காரணமாக அவரது இடது கை துண்டிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஜோதி தனக்கு ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு சென்னையில் உள்ள மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் மனு அளித்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஜோதி தரப்பில் மருத்துவ ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
விபத்து நடந்தபோது ஜோதிக்கு 31 வயது. எனவே அவரது வயது மற்றும் கையை இழந்த அவரது செயல்பாட்டு இயலாமை, மருத்துவ செலவுகள் உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு ஜோதிக்கு ரூ.23 லட்சத்து 84 ஆயிரம் இழப்பீடு வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ஜோதி.
கடந்த 2017 -ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜோதி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் ஒடாமா நகரில் உள்ள பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் வேகமாக ஓடி அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோதி பலத்த காயம் அடைந்தார்.
அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கையில் ஏற்பட்டிருந்த பலத்த காயங்கள் காரணமாக அவரது இடது கை துண்டிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஜோதி தனக்கு ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு சென்னையில் உள்ள மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் மனு அளித்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஜோதி தரப்பில் மருத்துவ ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
விபத்து நடந்தபோது ஜோதிக்கு 31 வயது. எனவே அவரது வயது மற்றும் கையை இழந்த அவரது செயல்பாட்டு இயலாமை, மருத்துவ செலவுகள் உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு ஜோதிக்கு ரூ.23 லட்சத்து 84 ஆயிரம் இழப்பீடு வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X