என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு
Byமாலை மலர்9 Dec 2019 7:49 AM GMT (Updated: 9 Dec 2019 7:49 AM GMT)
குரூப் 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது.
சென்னை:
தமிழக அரசுப்பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு நடத்தி வருகிறது. பதவிகளின் அடிப்படையில் குருப் 1, 2, மற்றும் 4 என தேர்வுகள் நடைபெறுகின்றன.
எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகளுக்குப் பிறகு பணியமர்த்தப்படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 12 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை நடந்த குருப்- 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகளை தேர்வாணையம் இன்று வெளியிட்டது.
துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 181 உயர் பதவிக்கான பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற அரசு இணையதளத்தில் பார்க்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வரும் 23 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X