search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எஸ்.சி
    X
    டி.என்.பி.எஸ்.சி

    குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு

    குரூப் 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது.
    சென்னை:

    தமிழக அரசுப்பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு நடத்தி வருகிறது. பதவிகளின் அடிப்படையில் குருப் 1, 2, மற்றும் 4 என தேர்வுகள் நடைபெறுகின்றன.

    எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகளுக்குப் பிறகு பணியமர்த்தப்படுகின்றனர். 

    இந்நிலையில், கடந்த ஜூலை 12 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை நடந்த குருப்- 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகளை தேர்வாணையம் இன்று வெளியிட்டது.

    துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 181 உயர் பதவிக்கான பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற அரசு இணையதளத்தில் பார்க்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வரும் 23 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×