என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வெங்காயத்தை தொடர்ந்து ஒரு முருங்கைக்காய் ரூ.50-க்கு விற்பனை
சென்னை:
நாடுமுழுவதும் வெங்காய விலை கடும் உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.150க்கும், சின்ன வெங்காயம் ரூ.150க்கும் விற்கப்பட்டு வருகிறது.
வெங்காயத்தைத் தொடர்ந்து முருங்கைக்காயின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. சில நாட்களாகவே முருங்கைக்காயின் விலை உயர்ந்திருந்தது.
ஒரு முருங்கைக்காய் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முருங்கைக்காயின் விலை மேலும் உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.350க்கு விற்கப்படுகிறது. அதை வாங்கும் வியாபாரிகள் சில்லரை விலைக்கு விற்கும் போது ஒரு முருங்கைக்காயை ரூ.40 முதல் ரூ. 50 வரை விற்கிறார்கள்.
இதுகுறித்து கோயம்பேடு வியாபாரி ஒருவர் கூறும்போது, பொதுவாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் 80 முதல் 100 டன் வரை வரும். சீசன் இல்லாத தற்போதைய காலத்தில் சராசரியாக 10 டன் வரை முருங்கைக்காய் வரத்து இருக்கும்.
ஆனால், தற்போது கடும் விளைச்சல் குறைவு காரணமாக ஒரு டன் முருங்கைக்காய் மட்டுமே வருகிறது. இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
திருச்சியில் ஒரு முருங்கைக்காய் ரூ.50ல் இருந்து ரூ.80 வரை விற்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்