என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொதிக்கும் எண்ணையை ஊற்றி கணவரை கொன்ற மனைவி கைது
Byமாலை மலர்8 Dec 2019 10:28 AM GMT (Updated: 8 Dec 2019 10:28 AM GMT)
குடும்பத் தகராறில் கணவரை கொதிக்கும் எண்ணையை ஊற்றி கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்:
திரு.வி.க.நகர் கிருஷ்ணாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் உபயதுல்லலா (39). இவரது மனைவி நஸ்ரின் (35). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர்.
உபயதுல்லாநஸ்ரின் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல் கடந்த 2-ந்தேதியும் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது உபயதுல்லா மனைவியை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நஸ்ரின் அடுப்பில் இருந்த கொதிக்கும் எண்ணையை கணவர் உபயதுல்லா மீது ஊற்றினார். இதில் உடல் வெந்த உபயதுல்லா அலறி துடித்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உபயதுல்லா பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து திரு.வ.க. நகர் போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து நஸ்ரினை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X