search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கும் இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்
    X
    திருவண்ணாமலையில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கும் இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்

    திருவண்ணாமலை மகா தீப விழாவையொட்டி 8000 போலீஸ் பாதுகாப்பு

    திருவண்ணாமலை மகா தீபவிழாவில் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 10-ந் தேதி 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    இதனை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், திருவண்ணாமலையில் தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் கார் பார்க்கிங் செய்யும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபத்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை சார்பில் 2600 சிறப்பு பஸ்கள், 6600 நடை இயக்கப்படுகிறது.

    போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பஸ், மினி வேன் போன்ற வாகனங்கள் நிறுத்த 15 தற்காலிக பஸ் நிலையங்களும், 24 ஆயிரம் கார்கள் நிறுத்தும் வகையில் 90 இடங்களில் கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கொண்டுவரும் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு இலவச பாதுகாப்பு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே நிர்வாகம் சார்பில் 22 சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    ஹவுரா எக்ஸ்பிரஸ் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கட்டளைதாரர், உபயதாரர் அனுமதி சீட்டு பெற்றவர்களில் கோவிலில் இடவசதியை பொறுத்து பரணி தீபம் தரிசனத்திற்கு 4 ஆயிரம் பக்தர்களும், மகா தீபம் தரிசனத்திற்கு 6 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    அதேபோல், பொது தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் பரணி தீபத்திற்கு 2 ஆயிரம் பக்தர்களும், மகா தீபத்திற்கு 3 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் கோவிலுக்குள் அழைத்து வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கார் பார்க்கிங் வசதி 48 மணி நேரத்திற்கு முன்பு இணையதளம் திறக்கப்படும்.

    இந்த ஆண்டு 1000 கார்கள் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார். ஆய்வின்போது, டி.ஆர்.ஓ. ரத்தினசாமி, ஏ.டி.எஸ்.பி. அசோக்குமார், திட்ட இயக்குநர் ஜெயசுதா, ஆர்டிஓ ஸ்ரீதேவி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அரவிந்த், நகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.




    Next Story
    ×