என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலையில் புதுமாப்பிள்ளை கழுத்தை இறுக்கி கொலை
Byமாலை மலர்2 Dec 2019 6:47 AM GMT (Updated: 2 Dec 2019 6:14 PM GMT)
திருவண்ணாமலையில் கழுத்தை இறுக்கி புதுமாப்பிள்ளை கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினர், உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேல். அவருடைய மகன் உதயசூரியன் (வயது30). வேலூர் ரோட்டில் மெடிக்கல் வைத்துள்ளார். அவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு திருமணமாகி ஒருமாதம் ஆகிறது. உதயசூரியனுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருக்கோவிலூர் ரோடு எடப்பாளையம் ஏரிக்கரையில் உதயசூரியன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோத தகராறில் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக அவரது உறவினர், குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேல். அவருடைய மகன் உதயசூரியன் (வயது30). வேலூர் ரோட்டில் மெடிக்கல் வைத்துள்ளார். அவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு திருமணமாகி ஒருமாதம் ஆகிறது. உதயசூரியனுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருக்கோவிலூர் ரோடு எடப்பாளையம் ஏரிக்கரையில் உதயசூரியன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோத தகராறில் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக அவரது உறவினர், குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X