என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக மீனவர்கள் கைதாவதை தடுக்க இலங்கை அரசுடன், மோடி பேச்சு நடத்த வேண்டும்- கே.எஸ்.அழகிரி
Byமாலை மலர்30 Nov 2019 9:20 AM GMT (Updated: 30 Nov 2019 9:20 AM GMT)
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தடுத்து நிறுத்துவதற்கு பிரதமர் மோடி இலங்கை அரசுடன் உறுதியான பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும் என்று கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார்.
இலங்கையில் உள்ள பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளதால் இலங்கையில் வாழ்கிற சிறுபான்மை தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது.
கடந்த 2009-ல் நடைபெற்ற போரின் போது இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே தலைமையிலான அரசில் ராணுவத்துறை செயலாளராக பணியாற்றியவர் தான் இன்றைக்கு அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஈவு இரக்கமற்ற முறையில் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர் இன்றைக்கு அதிபராக தேர்வு பெற்றிருப்பதனால் தமிழ் மக்களிடையே அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களின் 40 ஆண்டுகால பிரச்சனையை தீர்க்க, இனக்கொடுமைக்கு முடிவு காண ஜூலை 1987-ல் இந்திய-இலங்கை உடன்பாட்டை அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் உருவாக்கினார்கள். இதன்மூலம் வடக்கு, கிழக்கு மாகாணம் ஒன்றாக இணைக்கப்பட்டு தமிழ்த் தாயகம் உருவாக்கப்பட்டது. சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற நிலை மாறி, தமிழும் ஆட்சி மொழி என்கிற சமஉரிமையைப் பெற்றது.
தமிழர்களுக்கு சம உரிமை, சமவாய்ப்பு பெறுகிற வகையில் பல்வேறு உரிமைகளை இந்த ஒப்பந்தம் பெற்றுத்தந்தது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை பாராளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்தில் 13-வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையில் வாழ்கிற தமிழர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இன்றைக்கும் விளங்குவது 13-வது திருத்தம் தான். இதைப் பெற்றுத் தந்தவர் ராஜீவ்காந்தி என்பதை எவரும் மறுத்திட இயலாது. ஆனால், இலங்கை அரசுகள் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தின் முழு பலனை தமிழர்கள் பெற விடாமல் தடுத்து வருகின்றன.
இலங்கையில் வாழ்கிற தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற அமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருக்கிற சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சராக இருக்கிற விக்னேஷ்வரன் ஆகியோர் புதிதாக அதிபராக தேர்வு பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவின் அணுகுமுறையினால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருப்பதாகக் கருதுகிறார்கள். கடந்த அதிபர் தேர்தலில் பெரும்பாலான தமிழர்கள் கோத்தபயவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்பதே இந்த அச்சத்திற்கு காரணமாகும்.
இலங்கை தமிழர்களுக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு என்கிற ஒற்றை லட்சியத்தைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. அதை நோக்கித் தான் அவர்களது வழிமுறையும் இருந்து வருகிறது. இந்தியாவிற்குள் தமிழகம் இருப்பதைப் போல, அதிக அதிகாரங்களுடன் ஒரு மாநிலம் அமைவதே இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும். இதைத் தான் இலங்கை தமிழர்களும் விரும்புகிறார்கள். மாறாக, தமிழ் ஈழம் என்பது தீர்வாக இருக்க முடியாது.
நீண்டகாலமாக தமிழர்களுக்கு 13-வது திருத்தத்தின் படி நியாயமாக வழங்க வேண்டிய அதிகாரப் பகிர்வு இன்னும் வழங்கப்படாமல் இருக்கிறது.
இத்தகைய உரிமைகளை இலங்கை அரசிடமிருந்து பெற்றுத் தருகிற மிகப்பெரிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது. குறிப்பாக, பிரதமர் மோடி தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றுகிற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கு பிரதமர் மோடி இலங்கை அரசுடன் உறுதியான பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார்.
இலங்கையில் உள்ள பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளதால் இலங்கையில் வாழ்கிற சிறுபான்மை தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது.
கடந்த 2009-ல் நடைபெற்ற போரின் போது இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே தலைமையிலான அரசில் ராணுவத்துறை செயலாளராக பணியாற்றியவர் தான் இன்றைக்கு அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஈவு இரக்கமற்ற முறையில் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர் இன்றைக்கு அதிபராக தேர்வு பெற்றிருப்பதனால் தமிழ் மக்களிடையே அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களின் 40 ஆண்டுகால பிரச்சனையை தீர்க்க, இனக்கொடுமைக்கு முடிவு காண ஜூலை 1987-ல் இந்திய-இலங்கை உடன்பாட்டை அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் உருவாக்கினார்கள். இதன்மூலம் வடக்கு, கிழக்கு மாகாணம் ஒன்றாக இணைக்கப்பட்டு தமிழ்த் தாயகம் உருவாக்கப்பட்டது. சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற நிலை மாறி, தமிழும் ஆட்சி மொழி என்கிற சமஉரிமையைப் பெற்றது.
தமிழர்களுக்கு சம உரிமை, சமவாய்ப்பு பெறுகிற வகையில் பல்வேறு உரிமைகளை இந்த ஒப்பந்தம் பெற்றுத்தந்தது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை பாராளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்தில் 13-வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையில் வாழ்கிற தமிழர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இன்றைக்கும் விளங்குவது 13-வது திருத்தம் தான். இதைப் பெற்றுத் தந்தவர் ராஜீவ்காந்தி என்பதை எவரும் மறுத்திட இயலாது. ஆனால், இலங்கை அரசுகள் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தின் முழு பலனை தமிழர்கள் பெற விடாமல் தடுத்து வருகின்றன.
இலங்கையில் வாழ்கிற தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற அமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருக்கிற சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சராக இருக்கிற விக்னேஷ்வரன் ஆகியோர் புதிதாக அதிபராக தேர்வு பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவின் அணுகுமுறையினால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருப்பதாகக் கருதுகிறார்கள். கடந்த அதிபர் தேர்தலில் பெரும்பாலான தமிழர்கள் கோத்தபயவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்பதே இந்த அச்சத்திற்கு காரணமாகும்.
இலங்கை தமிழர்களுக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு என்கிற ஒற்றை லட்சியத்தைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. அதை நோக்கித் தான் அவர்களது வழிமுறையும் இருந்து வருகிறது. இந்தியாவிற்குள் தமிழகம் இருப்பதைப் போல, அதிக அதிகாரங்களுடன் ஒரு மாநிலம் அமைவதே இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும். இதைத் தான் இலங்கை தமிழர்களும் விரும்புகிறார்கள். மாறாக, தமிழ் ஈழம் என்பது தீர்வாக இருக்க முடியாது.
நீண்டகாலமாக தமிழர்களுக்கு 13-வது திருத்தத்தின் படி நியாயமாக வழங்க வேண்டிய அதிகாரப் பகிர்வு இன்னும் வழங்கப்படாமல் இருக்கிறது.
இத்தகைய உரிமைகளை இலங்கை அரசிடமிருந்து பெற்றுத் தருகிற மிகப்பெரிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது. குறிப்பாக, பிரதமர் மோடி தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றுகிற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கு பிரதமர் மோடி இலங்கை அரசுடன் உறுதியான பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X