search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட வனிதா- கனகராஜ்
    X
    கொலை செய்யப்பட்ட வனிதா- கனகராஜ்

    தஞ்சை அரசு குடியிருப்பில் கலெக்டர் அலுவலக உதவியாளர் பெண்- கள்ளக்காதலன் வெட்டி படுகொலை

    கலெக்டர் அலுவலக பெண் உதவியாளர், கள்ளக்காதலனுடன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புதிய வீட்டு வசதி குடியிருப்பில் வசித்து வந்தவர் வனிதா (வயது 42). இவர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது கணவர் காமராஜ், கடந்த சில ஆண்டுகளுக்கு இறந்து விட்டார். இதனால் கருணை அடிப்படையில் வனிதாவுக்கு கலெக்டர் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. வனிதாவுக்கு அரவிந்த் (20), ஆர்த்தி (17), அருணேஷ்(16) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் வனிதாவுக்கும் தஞ்சையை சேர்ந்த கனகராஜிக்கும் (35) இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

    கனகராஜிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். அவர்கள் திருவேதிக்குடியில் வசித்து வருகின்றனர். கனகராஜ், தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் வனிதா, தனது அண்ணன் மகன் பிரகாசிடம் (27) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சம் கடனாக வாங்கியிருந்தார். இதனால் சிறிதுசிறிதாக பணம் கொடுத்து ரூ.1½ லட்சம் வரை கடனை அடைத்து விட்டார். மீதி பணம் ரூ.50 ஆயிரம் கொடுக்க முடியாமல் காலம் கடத்தி வந்தார். இதனால் வனிதாவுக்கும் பிரகாசுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதற்கிடையே தொடர்ந்து பணம் தராமல் வனிதா ஏமாற்றி வந்ததால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ், தஞ்சை தெற்கு போலீசில் கடந்த வாரம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வனிதா தனது கள்ளக்காதலன் மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை பிரகாஷ், மற்றும் அவரது நண்பர் சூர்யா , மகேஷ் என்ற இளம்பெண் ஆகிய 3 பேர் வனிதா வீட்டுக்கு வந்தனர். அவர்கள் 3 பேரும் திடீரென தாங்கள் வைத்திருந்த அரிவாளால் வனிதாவை வெட்டினர். இதனால் சத்தம் கேட்டு கனகராஜ் மற்றும் அரவிந்த், ஆர்த்தி, அருணேஷ் ஆகியோர் கண்விழித்தனர்.

    அப்போது வனிதாவை அரிவாளால் அவர்கள் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் ஆத்திரம் அடங்காமல் கனகராஜையும் வெட்டினர். இதில் அவரும் பலத்த வெட்டுப்பட்டு அதே இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    தங்கள் கண்முன்னே தாயும், கனகராஜிம் வெட்டுப்பட்டு பலியானதை கண்டு அரவிந்த், ஆர்த்தி, அருணேஷ் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதன்பின்னர் வனிதா, கனகராஜ் ஆகியோர் இறந்ததை உறுதிசெய்த பிரகாஷ் மற்றும் சூர்யா, மகேஷ் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அரசு குடியிருப்பில் கலெக்டர் அலுவலக உதவியாளர், கள்ளக்காதலனுடன் வெட்டி கொல்லப்பட்ட தகவல் அப்பகுதியில் பரவியதால் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த இரட்டை கொலை குறித்து தகவல் கிடைத்ததும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், மற்றும் மருத்துவக்கல்லூரி போலீசார் விரைந்து வந்தனர். கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தலைமறைவாக இருந்து வரும் பிரகாஷ் உள்பட 3 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×