search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை துவக்கி வைத்த முதல்வர்.
    X
    கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை துவக்கி வைத்த முதல்வர்.

    பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் வழங்கப்படும்- முதல்வர் அறிவிப்பு

    அரிசி ரேசன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் 1000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்து, பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-

    பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 1000 ரூபாய் வழங்கப்படும். அரிசி ரேசன் அட்டை வைத்திருப்போருக்கு இந்த தொகை வழங்கப்படும். மேலும் பொங்கல் வைப்பதற்கான ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சையுடன் கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×