என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாண்டிபஜார் நவீன நடைபாதையில் கார் நிறுத்த மணிக்கு 20 ரூபாய்
Byமாலை மலர்19 Nov 2019 9:14 AM GMT (Updated: 19 Nov 2019 9:14 AM GMT)
பாண்டிபஜார் நவீன நடைபாதை வளாகத்தில் கார் நிறுத்த மணிக்கு 20 ரூபாயும், மோட்டார் சைக்கிளுக்கு ரூ.5 கட்டணமும் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை:
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தி.நகர் பாண்டி பஜாரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நவீன நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரையும், தணிகாசம் சாலை முதல் போக் சாலை வரை 1,450 மீட்டர் தூரத்துக்கு முதல் கட்டமாக நடைபாதை வளாகம் அமைக்கம் பணிகள் முடிந்துள்ளது.
இந்த நடைபாதை வளாகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 13-ந்தேதி திறந்து வைத்தார்.பொதுமக்கள் வசதிக்காக சாலையின் இருபுறமும் 10 மீட்டருக்கு நடைபாதை, இணையதள வசதி, நவீன இருக்கைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், குடிநீர் வசதி, ஸ்மார்ட் சைக்கிள், பேட்டரி கார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைபாதை வளாகத்தின் இருபுறமும் கார், மோட்டார் சைக்கிள் நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கார், மோட்டார் சைக்கிள்களுக்கு கட்டணம் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி நடைபாதை வளாகத்தில் நீண்ட நேரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கும் வகையில் காருக்கு மணிக்கு 20 ரூபாய் கட்டணமும், மோட்டார் சைக்கிளுக்கு ரூ.5 ம் கட்டணமாக வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
பார்க்கிங் மேலாண்மை திட்டத்தின்படி ‘ஸ்மார்ட் போனில் இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தலாம். அல்லது அங்குள்ள பணியாளர்களிடம் நேரடியாக கட்டணம் செலுத்தலாம்.
வாகனங்கள் எவ்வளவு நேரம் நிறுத்தப்பட்டுள்ளது என்ற விபரம் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் துல்லியமாக கணக்கிடப்படும்.
நடைபாதை வளாகத்தில் ஒரு மணி நேரத்துக்கு இலவச மாக ‘வைஃபை’ வசதியை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். அதன் பின்னர் மற்ற நேரங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தி.நகர் பாண்டி பஜாரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நவீன நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரையும், தணிகாசம் சாலை முதல் போக் சாலை வரை 1,450 மீட்டர் தூரத்துக்கு முதல் கட்டமாக நடைபாதை வளாகம் அமைக்கம் பணிகள் முடிந்துள்ளது.
இந்த நடைபாதை வளாகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 13-ந்தேதி திறந்து வைத்தார்.பொதுமக்கள் வசதிக்காக சாலையின் இருபுறமும் 10 மீட்டருக்கு நடைபாதை, இணையதள வசதி, நவீன இருக்கைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், குடிநீர் வசதி, ஸ்மார்ட் சைக்கிள், பேட்டரி கார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைபாதை வளாகத்தின் இருபுறமும் கார், மோட்டார் சைக்கிள் நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கார், மோட்டார் சைக்கிள்களுக்கு கட்டணம் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி நடைபாதை வளாகத்தில் நீண்ட நேரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கும் வகையில் காருக்கு மணிக்கு 20 ரூபாய் கட்டணமும், மோட்டார் சைக்கிளுக்கு ரூ.5 ம் கட்டணமாக வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
பார்க்கிங் மேலாண்மை திட்டத்தின்படி ‘ஸ்மார்ட் போனில் இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தலாம். அல்லது அங்குள்ள பணியாளர்களிடம் நேரடியாக கட்டணம் செலுத்தலாம்.
வாகனங்கள் எவ்வளவு நேரம் நிறுத்தப்பட்டுள்ளது என்ற விபரம் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் துல்லியமாக கணக்கிடப்படும்.
நடைபாதை வளாகத்தில் ஒரு மணி நேரத்துக்கு இலவச மாக ‘வைஃபை’ வசதியை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். அதன் பின்னர் மற்ற நேரங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X