என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 16 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதி
Byமாலை மலர்19 Nov 2019 4:41 AM GMT (Updated: 19 Nov 2019 4:41 AM GMT)
கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் 16 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை:
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் காய்ச்சலின் தாக்கம் குறையவில்லை.
கடந்த ஆண்டை விட உயிரிழப்புகள் குறைவு என்றாலும் காய்ச்சலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் 16 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கோவை மாவட்டத்தில் இருந்து 10 குழந்தைகளும், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 6 குழந்தைகள் என மொத்தம் 16 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்களை டாக்டர்கள் சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 17 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 157 பேர் என மொத்தம் 174 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் கூறியதாவது:-
குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோய் எதிப்பு சக்தி குறைவாக இருக்கும். அவர்களை காய்ச்சல் எளிதில் தாக்கும். தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெற்றோர் விழிப்புடன் இருப்பது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் காய்ச்சலின் தாக்கம் குறையவில்லை.
கடந்த ஆண்டை விட உயிரிழப்புகள் குறைவு என்றாலும் காய்ச்சலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் 16 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கோவை மாவட்டத்தில் இருந்து 10 குழந்தைகளும், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 6 குழந்தைகள் என மொத்தம் 16 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்களை டாக்டர்கள் சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 17 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 157 பேர் என மொத்தம் 174 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் கூறியதாவது:-
குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோய் எதிப்பு சக்தி குறைவாக இருக்கும். அவர்களை காய்ச்சல் எளிதில் தாக்கும். தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெற்றோர் விழிப்புடன் இருப்பது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X