search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பறக்கையில் 8-ம் வகுப்பு மாணவியிடம் செக்ஸ் சில்மி‌ஷம்- முதியவர் கைது

    பறக்கையில் 8-ம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை செட்டித்தெருவைச் சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 65). இவரது பக்கத்து வீட்டில் 8-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த மாணவி நீலகண்டன் வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். அதேபோல் சம்பவத்தன்றும் நீலகண்டன் வீட்டுக்கு மாணவி சென்றார். அப்போது வீட்டில் நீலகண்டன் மட்டும் தனியாக இருந்தார். அவர் திடீரென மாணவியிடம் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, நீலகண்டனை தள்ளிவிட்டு விட்டு வீட்டுக்கு ஓடிச் சென்றார்.

    வீட்டில் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். மாணவியின் பெற்றோர் அவரிடம் விசாரித்தனர்.

    அப்போது பக்கத்து வீட்டு நீலகண்டன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீலகண்டனை கைது செய்தனர்.

    Next Story
    ×