என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லஞ்ச வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறி சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் ரூ.10லட்சம் மோசடி - வாலிபர் கைது
Byமாலை மலர்16 Nov 2019 3:19 PM GMT (Updated: 16 Nov 2019 3:19 PM GMT)
லஞ்ச வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறி சப் இன்ஸ்பெக்டர் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
கரூர் மாவட்டம குளித்தலை பெரியப்பாலம் ஏ.பி.பி.நகரை சேர்ந்தவர் ரகுபதி. இவர் கரூர் மாவட்டம் வாங்கல் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இதனிடையே லஞ்ச வழக்கில் கைதான அவரை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பான செய்தி பத்திரிகைகளில் வெளியானது.
இதனைப்பார்த்த கடலூர் மாவட்டம் திட்டக்குடி ஆலம்பாடி மேற்கு தெருவை சேர்ந்த சாந்தப்பன் (வயது 45) என்பவர், ரகுபதியின் மனைவி லதாவின் செல்போனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், தனக்கு போலீஸ் உயர் அதிகாரிகளை தெரியும். எனவே உங்களது கணவரை லஞ்ச வழக்கில் இருந்து விடுவிக்க ஏற்பாடு செய்கிறேன். அதற்காக தனக்கு ரூ.10லட்சம் தர வேண்டும்என்று கேட்டுள்ளார்.
இதைநம்பிய லதா, கடந்த 27-2-2019 அன்று திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே சாந்தப்பனை லதா சந்தித்து ரூ.10லட்சத்தை கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட சாந்தப்பன், லதாவிடம் நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி விட்டு சென்றார். அதன்பிறகு அவர், ரகுபதியை விடுவிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சாந்தப்பனின் செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் லதா அதிர்ச்சியடைந்தார். மேலும் தான் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்தார்.
இந்தநிலையில் ரகுபதி ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். இதையடுத்து லதா, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் தன்னை ஏமாற்றிய சாந்தப்பன் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். கமிஷனர் அமல்ராஜ் இது குறித்து விசாரணை நடத்த திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் விசாரணை நடத்தி சாந்தப்பனை கைது செய்தார். அவர் இது போல் பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அது குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.ஐ. மனைவியிடம் பணமோசடி செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம குளித்தலை பெரியப்பாலம் ஏ.பி.பி.நகரை சேர்ந்தவர் ரகுபதி. இவர் கரூர் மாவட்டம் வாங்கல் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இதனிடையே லஞ்ச வழக்கில் கைதான அவரை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பான செய்தி பத்திரிகைகளில் வெளியானது.
இதனைப்பார்த்த கடலூர் மாவட்டம் திட்டக்குடி ஆலம்பாடி மேற்கு தெருவை சேர்ந்த சாந்தப்பன் (வயது 45) என்பவர், ரகுபதியின் மனைவி லதாவின் செல்போனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், தனக்கு போலீஸ் உயர் அதிகாரிகளை தெரியும். எனவே உங்களது கணவரை லஞ்ச வழக்கில் இருந்து விடுவிக்க ஏற்பாடு செய்கிறேன். அதற்காக தனக்கு ரூ.10லட்சம் தர வேண்டும்என்று கேட்டுள்ளார்.
இதைநம்பிய லதா, கடந்த 27-2-2019 அன்று திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே சாந்தப்பனை லதா சந்தித்து ரூ.10லட்சத்தை கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட சாந்தப்பன், லதாவிடம் நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி விட்டு சென்றார். அதன்பிறகு அவர், ரகுபதியை விடுவிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சாந்தப்பனின் செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் லதா அதிர்ச்சியடைந்தார். மேலும் தான் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்தார்.
இந்தநிலையில் ரகுபதி ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். இதையடுத்து லதா, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் தன்னை ஏமாற்றிய சாந்தப்பன் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். கமிஷனர் அமல்ராஜ் இது குறித்து விசாரணை நடத்த திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் விசாரணை நடத்தி சாந்தப்பனை கைது செய்தார். அவர் இது போல் பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அது குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.ஐ. மனைவியிடம் பணமோசடி செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X