search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஓட்டலில் அறை கேட்டு பொம்மை துப்பாக்கி காட்டி மிரட்டிய பா.ஜனதா பிரமுகர்

    சேலம் அருகே ஓட்டலில் அறை கேட்டு பொம்மை துப்பாக்கி காட்டி மிரட்டிய பாரதிய ஜனதா பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் ராமகிருஷ்ணா ரோடு அருகே பிரபல ஒரு ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் அங்கு வரவேற்பு அறையில் இருந்த ஊழியரிடம் நான் ஆன்லைனில் அறை புக்கிங் செய்துள்ளேன் அறை கொடுங்கள் என கேட்டார்.

    இதில் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் நீங்கள் ஆன்லைனில் புக்கிங் செய்யவில்லை பணம் கொடுத்தால் அறை தருகிறோம் என்று கூறினர்.

    நான் யார் தெரியுமா? எனக்கு பிரதமர், அமித்ஷா தெரியும் எனக்கு அறை தர மறுக்கிறீர்களா? என்று கூறி அந்த நபர் பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை பிடித்துபோலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த வாலிபர் கோவை ரத்தினபுரியை சேர்ந்த சரவணன் (வயது 42) பா.ஜனதா பிரமுகர் என்று தெரிய வந்தது. இவர் ஆர்க்கிடெக் தொழில் செய்து வருகிறார். வேலை காரணமாக சேலம் வந்த அவர்ஓட்டலில் தங்க பணம் இல்லாததால் இப்படி மிரட்டியதாகவும் அவர் கையில் வைத்திருந்தது பொம்மை துப்பாக்கி என்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொம்மை துப்பாக்கியை காட்டி ஓட்டலில் பா.ஜ.கா. பிரமுகர் அறை கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×