என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே 2 வீடுகளை உடைத்து நகை,பணம் கொள்ளை
தேனி:
தேனி அருகில் உள்ள கோடாங்கிபட்டி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த கணேசன் மகள் நிவேதா. சம்பவத்தன்று இவரது வீட்டில் டைல்ஸ் பதிக்கும் பணி நடந்து வந்தது. இதனால் தனது வீட்டில் இருந்த நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை ஒரு அறையில் பூட்டி வைத்து விட்டு தனது தந்தை வீட்டிற்கு வந்து விட்டார்.
மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அந்த அறையில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ரூ.3 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து கணேசன் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள தாமரைக்குளம் புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் சரவணன் மனைவி நாகஜோதி (வயது31). சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் வசிக்கும் தனது மாமனாருக்கு சாப்பாடு கொடுக்க சென்று விட்டார். மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் நகைகள், செல்போன் ஆகியவை திருடு போயிருந்தது.
இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும். இது குறித்து நாகஜோதி தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தனது வீட்டு அருகில் வசிக்கும் அக்கா மகள் லட்சுமி (21) என்பவர்தான் திருடி இருக்ககூடும் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் பொருட்களை திருடியதை ஒத்துக் கொண்டார். இதனையடுத்து போலீசார் லட்சுமியை கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்