என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஸ்டாலினை மனதில் வைத்தே முக அழகிரி பேசியுள்ளார்- ராஜன்செல்லப்பா பேட்டி
திருப்பரங்குன்றம்:
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ. வுமான ராஜன்செல்லப்பா உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினரிடம் விருப்ப மனுக்களை இன்று வாங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வினரிடம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை பெற்று வருகிறோம். கட்சியினர் ஆர்வமுடன் மனு அளித்து வருகின்றனர். தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்போதோ நிரப்பி விட்டார்.
முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டியளிக்கும்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தலைமைக்கான தகுதி இல்லை என்பதை சுட்டிக் காட்டவே அவரை மனதில் வைத்தே மறைமுகமாக வெற்றிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க.வில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆட்கள் இல்லை. அ.ம.மு.க.வை பொருத்தவரை தேர்தலில் 2 சதவீதம் கூட வாக்குகள் பெறவில்லை. உள்ளாட்சி தேர்தலில் அவர்கள் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. உள்ளாட்சி தேர்தலில் முழுமையான வெற்றியை பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்