search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.என்.நேரு
    X
    கே.என்.நேரு

    உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும்- கே.என்.நேரு பேட்டி

    உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
    திருச்சி:

    திருச்சி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று காலை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதனை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

    உள்ளாட்சி தேர்தலில் 2, 3 கட்டங்களாக பிரித்து வெற்றி வாய்ப்புள்ளதாக கருதும் பகுதியில் முதல் கட்ட தேர்தலை நடத்த ஆளுங்கட்சியினர் உத்தேசித்துள்ளதாக  கூறப்படுகிறது. இதனால் தி.மு.க.வுக்கு எந்த பயமும் கிடையாது. 1986-ல் எம்.ஜி.ஆர். இந்தி ராகாந்தியோடு கூட்டணி வைத்த காலத்திலேயே தி.மு.க. பெரும்பகுதி இடங்களில் வெற்றி பெற்றது.

    உள்ளாட்சி தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். தேர்தல் தேதி அறிவிக்க உள்ள நிலையில் முன்கூட்டியே ஆளுங்கட்சியினர் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள். ஆட்சி, அதிகாரம் இருப்பதால் இவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் என்ன செய்தாலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் மாபெரும் வெற்றிபெறும். மு.க.ஸ்டாலின் ஆணைப்படி இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். தி.மு.க.வில் தொய்வு என்பது கிடையாது, உற்சாகமாக இருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றியை பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×