search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த காரை படத்தில் காணலாம்.
    X
    பெண் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த காரை படத்தில் காணலாம்.

    திருச்சி அருகே வனப்பகுதியில் பயங்கரம் - காருக்குள் பெண் எரித்துக்கொலை

    திருச்சி அருகே வனப்பகுதியில் காருக்குள் வைத்து பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சி வனப்பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் கார் ஒன்று கிடந்ததுடன் அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அருகில் சென்று பார்த்த போது காருக்குள் எரிக்கப்பட்ட நிலையில் பிணம் கிடந்தது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக சிறுகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து திருச்சி மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு முற்றிலும் எரிந்த நிலையில் நின்ற காரில் பிணம் ஒன்றும் கிடந்தது. 90 சதவீதம் அளவுக்கு உடல் எரிந்திருந்ததால் இறந்தது ஆணா? பெண்ணா? என்று கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு முற்றிலும் எரிந்த நிலையில் இருந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய ஆய்வில் இறந்து கிடந்தது பெண் என தெரிய வந்தது.

    உடல் முற்றிலும் எரிந்து காணப்பட்டதால் அந்த பெண் யார் என்பதை அடையாளம் கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மர்ம நபர்கள் யாராவது அந்த பெண்ணை தச்சங்குறிச்சி வனப்பகுதிக்கு கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. போலீசார் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க காருக்குள்ளேயே வைத்து தீ வைத்து எரித்து விட்டு சென்றிருக்கலாம் என கருதுகின்றனர்.

    சம்பவ இடத்திற்கு மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. நாய், பெண் இறந்து கிடந்த பகுதியில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் வரை சென்று நின்று விட்டது. தடயவியல் நிபுணர்கள் அங்கு கிடந்த தடயங்களை சேகரித்தனர்.

    கொலை செய்யப்பட்ட பெண் விபசார அழகியாக இருக்கலாமா? என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். கள்ளக்காதல் பிரச்சினையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தச்சங்குறிச்சி வனப்பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இன்று மற்றொரு பெண் காருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×