search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை (கோப்புப்படம்)
    X
    கொலை (கோப்புப்படம்)

    திருப்பூரில் காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர்

    மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஊத்துக்குளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மேற்கு வீதியை சேர்ந்தவர் நிஷார் அகமது (37). கழிவு குடோன் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அதே பகுதியை சேர்ந்த ஹசினா (21) என்பவரை காதலித்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு 2 வயது மகன் உள்ளார். நிஷார் அகமதுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. மேலும் மனைவி ஹசினா நடவடிக்கையிலும் நிஷார் அகமதுக்கு சந்தேகம் இருந்துள்ளது.

    இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலை மீண்டும் அவர்களுக்குள் தகராறு உருவானது.

    இதில் ஆத்திரம் அடைந்த நிஷார் அகமது வீட்டை உள் பக்கம் பூட்டி விட்டு அங்கிருந்த கத்தியால் மனைவி கழுத்தை சரமாரியாக அறுத்தார். இதில் ஹசினா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே பிணமானார். பின்னர் நிஷா அகமது தனது கழுத்தை கத்தியால் தனக்கு தானே அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

    ஹசினாவின் 2 வயது குழந்தை தாயின் உடல் அருகே அழுது கொண்டு இருந்தது. ஹசினாவின் தாய் ரைஜனா வீடு அருகே தான் உள்ளது. அவர் குழந்தை அழும் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்தார். அப்போது வீடு உள் பக்கம் பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஹசினா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும், நிஷார் அகமது கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்ததை பார்த்து திடுக்கிட்டார்.

    இது குறித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட ஹசினா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த நிஷார் அகமதுவை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் நிலை மோசமாக உள்ளது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
    Next Story
    ×