என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிரான்ஸ்பார்மரில் மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை பலி
Byமாலை மலர்11 Nov 2019 5:56 AM GMT (Updated: 11 Nov 2019 5:56 AM GMT)
நாமக்கல் அருகே டிரான்ஸ்பார்மரில் மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு:
சேலம் மாவட்டம், சங்ககிரி ஈ.பி. ஆயில் ரோடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (28). இவர் திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் சத்து மாவு தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரும், இவரது மனைவி கலைசெல்வியும் (27) ராசிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றனர். திருமணத்தை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்கள். அப்போது கொன்னையார் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, சாலை ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.
இதில் தினேஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி கலைசெல்விக்கு காலில் அடிபட்டதில் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தினேஷ்குமாருக்கு திருமணமாகி 10 நாட்கள் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி ஈ.பி. ஆயில் ரோடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (28). இவர் திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் சத்து மாவு தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரும், இவரது மனைவி கலைசெல்வியும் (27) ராசிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றனர். திருமணத்தை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்கள். அப்போது கொன்னையார் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, சாலை ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.
இதில் தினேஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி கலைசெல்விக்கு காலில் அடிபட்டதில் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தினேஷ்குமாருக்கு திருமணமாகி 10 நாட்கள் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X