search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை (கோப்பு படம்)
    X
    தற்கொலை (கோப்பு படம்)

    சென்னை ஐஐடி விடுதியில் மாணவி தற்கொலை

    சென்னை ஐஐடி கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சென்னை:

    கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப். இவர் கிண்டியில் உள்ள சென்னை ஐஐடியில் முதலாமாண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி படித்து வந்த பாத்திமா இன்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×