search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் பாண்டியராஜன்
    X
    அமைச்சர் பாண்டியராஜன்

    அமைச்சர் பாண்டியராஜன் உருவபொம்மை எரிப்பு - தி.மு.க.வினர் 35 பேர் மீது வழக்கு

    முக ஸ்டாலின் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பாண்டியராஜனின் உருவபொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்தில் தி.மு.க.வினர் 35 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாநகரில் நேற்று தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சரின் உருவபொம்மை தீவைத்து எரிக்கப்பட்டது.

    இது தொடர்பாக தி.மு.க. நிர்வாகி பரமசிவம் என்பவர் உள்பட 35 தி.மு.க.வினர் மீது அண்ணாநகர் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள அமைச்சர் பாண்டியராஜனின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அமைச்சரை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தி.மு.க.வினர் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

    பொள்ளாச்சி வால்பாறை சாலையில் மேம்பாலத்தில் அமைச்சர் பாண்டியராஜனின் உருவ பொம்மையை கட்டி தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.

    பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விரைந்து சென்று உருவபொம்மையை அகற்றினர். உருவ பொம்மையை தொங்கவிட்டது யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×