என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சிறுமியை கடத்தி கற்பழித்த வாலிபருக்கு 17 ஆண்டு ஜெயில்- மகிளா கோர்ட்டு தீர்ப்பு
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணன் மகன் சவுந்தரபாண்டி (வயது19). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இருவரும் அண்ணன், தங்கை உறவுமுறையாகும்.
ஆனால் அதனையும் மீறி கடந்த வருடம் மே மாதம் 21-ந் தேதி சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழனிக்கு கடத்தி சென்றார். பின்னர் அவரை மறைவான பகுதிக்கு அழைத்து சென்று பலவந்தப்படுத்தி கற்பழித்தார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சவுந்தரபாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறுமியை கடத்தியதற்காக 7வருடமும், கற்பழித்ததற்காக 10 வருடம் என மொத்தம் 17 வருட சிறை தண்டனையை ஏக காலத்தில் சவுந்தரபாண்டி அனுபவிக்க வேண்டும் என நீதிபதி புருசோத்தமன் உத்தரவிட்டார். மேலும் சவுந்தரபாண்டிக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் அரசு வக்கீலாக கோப்பெருந்தேவி வாதாடினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்