என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் அருகே 6 வயது மகளுடன் கிணற்றில் குதித்து நர்சு தற்கொலை
Byமாலை மலர்4 Nov 2019 5:38 AM GMT (Updated: 4 Nov 2019 5:38 AM GMT)
விழுப்புரம் அருகே இன்று காலை கணவர் இறந்த சோகத்தில் மகளுடன், தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ளது நேமூர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 38). இவரது மனைவி சரசு(வயது 32). இவர்களுக்கு 6 வயதில் வைசாலி என்ற மகள் இருந்தாள்.
சரசு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சரசு தனது வேலையில் விருப்ப ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்தார்.
பின்னர் அவர் தனது கணவரை கவனித்து வந்தார். நோய் அதிகமானதால் கார்த்திக் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்ததால் சரசு மனவேதனை அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் பேசாமல் இருந்தார்.
கணவர் இறந்த சோகத்தில் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இன்று அதிகாலை 5 மணியளவில் சரசு தனது மகள் வைசாலியை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றுக்கு அழைத்து சென்றார். அதனைத்தொடர்ந்து தனது மனதை கல்லாக்கி கொண்டு மகள் வைசாலியை இறுக்கி கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் குதித்தார்.
சிறிது நேரத்தில் சரசுவும், வைசாலியும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றுக்குள் சரசுவும், அவரது மகள் வைசாலியும் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
இதற்கிடையே கிணற்றுக்குள் குதித்து தாய், மகள் இறந்த சம்பவம் கஞ்சனூர் போலீசுக்கு தெரியவந்தது. போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் கிணற்றுக்குள் பிணமாக மிதந்த தாய், மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் அருகே உள்ளது நேமூர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 38). இவரது மனைவி சரசு(வயது 32). இவர்களுக்கு 6 வயதில் வைசாலி என்ற மகள் இருந்தாள்.
சரசு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சரசு தனது வேலையில் விருப்ப ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்தார்.
பின்னர் அவர் தனது கணவரை கவனித்து வந்தார். நோய் அதிகமானதால் கார்த்திக் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்ததால் சரசு மனவேதனை அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் பேசாமல் இருந்தார்.
கணவர் இறந்த சோகத்தில் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இன்று அதிகாலை 5 மணியளவில் சரசு தனது மகள் வைசாலியை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றுக்கு அழைத்து சென்றார். அதனைத்தொடர்ந்து தனது மனதை கல்லாக்கி கொண்டு மகள் வைசாலியை இறுக்கி கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் குதித்தார்.
சிறிது நேரத்தில் சரசுவும், வைசாலியும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றுக்குள் சரசுவும், அவரது மகள் வைசாலியும் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
இதற்கிடையே கிணற்றுக்குள் குதித்து தாய், மகள் இறந்த சம்பவம் கஞ்சனூர் போலீசுக்கு தெரியவந்தது. போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் கிணற்றுக்குள் பிணமாக மிதந்த தாய், மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X