என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் வாலிபர் அடித்துக்கொலை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் மார்க்கெட் கமிட்டி வளாகம் உள்ளது. இதன் அருகே தற்போது புதியதாக மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த இடத்தில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்துகிடந்தார். இதனைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இறந்து கிடந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. வாலிபரின் கால் முகம் தலை ஆகிய இடங்களில் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தன. மேலும் அவர் யாருடனோ கட்டிப்புரண்டு சண்டை போட்டது போல உடல் முழுவதும் சேறும் சகதியுமாக இருந்தது. அவரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து வீசியுள்ளது தெரியவந்துள்ளது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குபதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார் கொலைக்கான காரணம் என்ன அவரை அடித்துக் கொன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்