search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தர்மபுரியில் இன்று காலை மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

    தர்மபுரி அருகே இன்று காலை மின்சாரம் தாக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரியை அடுத்த வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 53), விவசாயி. மாடுகளும் வளர்த்து வருகிறார்.

    இவர் இன்று அதிகாலை மாட்டுச்சாணத்தை கூடையில் எடுத்துக் கொண்டு வயலில் கொட்டுவதற்காக நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    இவரது வயலுக்கு செல்லும் வழியில் வடிவேல் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இவர் மின்சார வயரை தரையில் விட்டு உள்ளார். அந்த வயர் சேதமாகி இருந்தது. அதை பழனி மிதித்து விட்டார். இதனால் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு வடிவேல் வீடு அருகே உள்ள பால் வியாபாரி தேவராஜ் (48) என்பவர் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியானார்கள்.

    இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மின்சாரம் தாக்கி இறந்த தேவராஜுக்கு ராஜேஷ் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இறந்த பழனிக்கு சாரதா என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
    Next Story
    ×