என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரியில் இன்று காலை மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
Byமாலை மலர்30 Oct 2019 5:06 AM GMT (Updated: 30 Oct 2019 5:06 AM GMT)
தர்மபுரி அருகே இன்று காலை மின்சாரம் தாக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரியை அடுத்த வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 53), விவசாயி. மாடுகளும் வளர்த்து வருகிறார்.
இவர் இன்று அதிகாலை மாட்டுச்சாணத்தை கூடையில் எடுத்துக் கொண்டு வயலில் கொட்டுவதற்காக நடந்து சென்று கொண்டு இருந்தார்.
இவரது வயலுக்கு செல்லும் வழியில் வடிவேல் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இவர் மின்சார வயரை தரையில் விட்டு உள்ளார். அந்த வயர் சேதமாகி இருந்தது. அதை பழனி மிதித்து விட்டார். இதனால் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு வடிவேல் வீடு அருகே உள்ள பால் வியாபாரி தேவராஜ் (48) என்பவர் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியானார்கள்.
இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மின்சாரம் தாக்கி இறந்த தேவராஜுக்கு ராஜேஷ் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இறந்த பழனிக்கு சாரதா என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
தர்மபுரியை அடுத்த வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 53), விவசாயி. மாடுகளும் வளர்த்து வருகிறார்.
இவர் இன்று அதிகாலை மாட்டுச்சாணத்தை கூடையில் எடுத்துக் கொண்டு வயலில் கொட்டுவதற்காக நடந்து சென்று கொண்டு இருந்தார்.
இவரது வயலுக்கு செல்லும் வழியில் வடிவேல் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இவர் மின்சார வயரை தரையில் விட்டு உள்ளார். அந்த வயர் சேதமாகி இருந்தது. அதை பழனி மிதித்து விட்டார். இதனால் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு வடிவேல் வீடு அருகே உள்ள பால் வியாபாரி தேவராஜ் (48) என்பவர் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியானார்கள்.
இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மின்சாரம் தாக்கி இறந்த தேவராஜுக்கு ராஜேஷ் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இறந்த பழனிக்கு சாரதா என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X