search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்குறிச்சியில் தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் கூடி நின்ற காட்சி.
    X
    கள்ளக்குறிச்சியில் தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் கூடி நின்ற காட்சி.

    கள்ளக்குறிச்சியில் சிறப்பு காட்சி நடத்தக்கோரி விஜய் ரசிகர்கள் ரகளை

    கள்ளக்குறிச்சியில் பிகில் படத்தின் சிறப்பு காட்சி வெளியிடக்கோரி விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கள்ளக்குறிச்சி:

    அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படம் தீபாவளியையொட்டி இன்று ரிலீசானாது.

    நேற்று மாலை முதலே பிகில் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் குவிந்தனர். அவர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.

    கள்ளக்குறிச்சி பகுதியிலும் 3 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று காலை சிறப்பு காட்சிகள் நடத்தப்படவில்லை. எனவே விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். சிறப்பு காட்சிகள் நடத்தக்கோரி போராட்டம் செய்தனர்.

    அப்போது தியேட்டர் முன்பு கோ‌ஷமிட்டு ரகளை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர்.

    இதனால் அங்கு கூடிநின்ற விஜய் ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதனால் அந்த பகுதியில் பதட்டமான நிலை உருவானது. அதனை தொடர்ந்து கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
    Next Story
    ×