search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சேலம் சிறை பகுதியில் ஹெலி கேமிரா பறந்ததால் பரபரப்பு

    சேலம் சிறை பகுதியில் இன்று காலை ட்ரோன் எனப்படும் ஹெலி கேமிரா பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இதன் எதிரே பெண்கள் ஜெயிலும் உள்ளது.

    ஜெயில் கைதிகளிடம் அடிக்கடி செல்போன், கஞ்சா ஆகியவை ஆய்வு செய்து அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை ஜெயில் இருக்கும் பகுதியில் ட்ரோன் எனப்படும் ஹெலி கேமிரா பறந்தது. இதை பார்த்த ஜெயில் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கேமிராவை பறக்க விட்ட 4 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் அஸ்தம்பட்டி - ஏற்காடு சாலையை இருபுறமும் 50 அடி அகலப்படுத்தும் பணிக்காக அளவீடு செய்வதற்காக ஹெலி கேமிராவை பறக்க விட்டதாக தெரிவித்தனர். இருந்தாலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×