என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை: அணைகளில் நீர்மட்டம் உயர்வு
Byமாலை மலர்21 Oct 2019 5:16 AM GMT (Updated: 21 Oct 2019 5:16 AM GMT)
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. சாத்தனூர் அணை, தண்டராம்பட்டு, போளூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இன்று காலை மாவட்டம் முழுவதும் மந்தமான தட்பவெப்ப நிலை நிலவியது.சில இடங்களில் மழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு சென்ற மாணவ மாணவிகள் அவதி அடைந்தனர்.
சாத்தனூர் அணைக்கு 428 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 83.25அடியாக உள்ளது. குப்பநத்தம் அணை நீர்மட்டம் 41.33 அடியாக உள்ளது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து இல்லை.
செண்பகத்தோப்பு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக அணைக்கு 16 அடி கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 62.32 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது 47.23 அடி தண்ணீர் உள்ளது.
அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
திருவண்ணாமலை-10.3, ஆரணி-11, செய்யாறு-6.5, செங்கம்-12.6, சாத்தனூர் அணை-33.4, வந்தவாசி-13.2, போளூர்-25.8, தண்டராம்பட்டு-31.6, சேத்துப்பட்டு-5, கீழ்பெண்ணாத்தூர்-16.8, வெம்பாக்கம்-4.
இதேபோல் வேலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. ஆம்பூர், நாட்டறம்பள்ளி, காவேரிப்பாக்கம், கேத்தாண்டப்பட்டி, மேல்ஆலத்தூர் பகுதிகளில் மழை பெய்துள்ளது.
வேலூரில் இன்று காலை சாரல் மழை பெய்தது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர், மோர்தானா அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. சாத்தனூர் அணை, தண்டராம்பட்டு, போளூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இன்று காலை மாவட்டம் முழுவதும் மந்தமான தட்பவெப்ப நிலை நிலவியது.சில இடங்களில் மழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு சென்ற மாணவ மாணவிகள் அவதி அடைந்தனர்.
சாத்தனூர் அணைக்கு 428 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 83.25அடியாக உள்ளது. குப்பநத்தம் அணை நீர்மட்டம் 41.33 அடியாக உள்ளது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து இல்லை.
செண்பகத்தோப்பு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக அணைக்கு 16 அடி கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 62.32 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது 47.23 அடி தண்ணீர் உள்ளது.
அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
திருவண்ணாமலை-10.3, ஆரணி-11, செய்யாறு-6.5, செங்கம்-12.6, சாத்தனூர் அணை-33.4, வந்தவாசி-13.2, போளூர்-25.8, தண்டராம்பட்டு-31.6, சேத்துப்பட்டு-5, கீழ்பெண்ணாத்தூர்-16.8, வெம்பாக்கம்-4.
இதேபோல் வேலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. ஆம்பூர், நாட்டறம்பள்ளி, காவேரிப்பாக்கம், கேத்தாண்டப்பட்டி, மேல்ஆலத்தூர் பகுதிகளில் மழை பெய்துள்ளது.
வேலூரில் இன்று காலை சாரல் மழை பெய்தது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர், மோர்தானா அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X