என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோழவரம் அருகே சிகரெட் குடோனில் தீ விபத்து
Byமாலை மலர்16 Oct 2019 10:20 AM GMT (Updated: 16 Oct 2019 1:15 PM GMT)
சோழவரம் அருகே சிகரெட் குடோனில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்குன்றம்:
சோழவரம் அருகே பண்டிகாவனூர் கிராமம் உள்ளது.
இங்கு கடந்த 5 ஆண்டுகளாக சிகரெட் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சிகரெட் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த குடோனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பண்டல்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. காவலாளிகள் இரவு- பகலாக இந்த குடோனை பாதுகாத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் குடோனின் ஒரு பகுதியில் புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு காவலாளிகள் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து செங்குன்றம், ஊத்துக்கோட்டை, பெரிய பாளையம், பொன்னேரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 தீயணைப்பு வண்டிகள் வந்தன. 64 தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து தீயணைக்கும் பணி நடைபெற்றது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோழவரம் அருகே பண்டிகாவனூர் கிராமம் உள்ளது.
இங்கு கடந்த 5 ஆண்டுகளாக சிகரெட் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சிகரெட் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த குடோனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பண்டல்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. காவலாளிகள் இரவு- பகலாக இந்த குடோனை பாதுகாத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் குடோனின் ஒரு பகுதியில் புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு காவலாளிகள் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து செங்குன்றம், ஊத்துக்கோட்டை, பெரிய பாளையம், பொன்னேரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 தீயணைப்பு வண்டிகள் வந்தன. 64 தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து தீயணைக்கும் பணி நடைபெற்றது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X