என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரத்தில் விபத்து- அ.தி.மு.க.கிளை செயலாளர் பலி
Byமாலை மலர்16 Oct 2019 4:46 AM GMT (Updated: 16 Oct 2019 4:46 AM GMT)
விழுப்புரத்தில் சாலையோரம் நின்ற கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அ.தி.மு.க. கிளை செயலாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பூரானூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் குப்பன் (வயது 48). இவர் அந்த பகுதியின் அ.தி.மு.க.கிளை செயலாளராக இருந்தார். விழுப்புரத்தில் உள்ள தனியார் பஸ்சில் கண்டக்டராகவும் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை குப்பன் அவரது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (38) என்பவரை ஏற்றி கொண்டு விழுப்புரம் நோக்கி புறப்பட்டார்.
விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலை பகுதியில் கார் ஒன்று சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அந்த காரின் மீது எதிர்பாராதவிதமாக குப்பனின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து குப்பன், புருஷோத்தமன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த குப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். புருஷோத்தமன் 2 கால்களும் முறிந்து பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான குப்பனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகள் மற்றும் 1 மகனும் உள்ளனர்.
விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பூரானூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் குப்பன் (வயது 48). இவர் அந்த பகுதியின் அ.தி.மு.க.கிளை செயலாளராக இருந்தார். விழுப்புரத்தில் உள்ள தனியார் பஸ்சில் கண்டக்டராகவும் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை குப்பன் அவரது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (38) என்பவரை ஏற்றி கொண்டு விழுப்புரம் நோக்கி புறப்பட்டார்.
விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலை பகுதியில் கார் ஒன்று சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அந்த காரின் மீது எதிர்பாராதவிதமாக குப்பனின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து குப்பன், புருஷோத்தமன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த குப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். புருஷோத்தமன் 2 கால்களும் முறிந்து பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான குப்பனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகள் மற்றும் 1 மகனும் உள்ளனர்.
விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X